Click here

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • நீர் – கடல்
  • கோல் – கொம்பு
இலக்கணக்குறிப்பு:
  • நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை
  • கருங்கோல் – பண்புத்தொகை
பிரித்தறிதல்:
  • ஆரளவு – அருமை+அளவு
  • கருங்கோல் – கருமை+கோல்
  • பெருந்தேன் – பெருமை+தேன்
நூல் குறிப்பு:
  • குறுமை + தொகை = குறுந்தொகை
  • குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ.
  • பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

ஜி.யு.போப் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

  •   பெயர் -  ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  •   பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  •   பிறப்பு -  கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பிறந்தார் 
  •   பெற்றோர் - ஜான் போப், கேதரின்  யூக்ளோ போப் 
  •   போப்பின்  தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில்  கிறித்துவமதத்தைப்  பரப்பும் சமய குருவாகப்  பணியாற்றினார்.    அவரைப்போன்று  பணியாற்ற  விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம்  வந்தார்.
  •  அவர் பாய்மரக்  கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.
  •   தமிழ்நாட்டில்  சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார். திருநெல்வேலி  மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார். அங்கு பள்ளிகளை  நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
  •  சமயக்கல்லூரியில்  தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின்,  எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
  •  கணிதம், அறிவாய்வு(தருக்கம்),  மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  •   திருநெல்வேலியில்  1842 முதல் 1849 வரை கல்விப் பணியும் சமயப்பணியும்  ஆற்றினார் .
  • 1850இல்  இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம்  வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.
  • தஞ்சையில்  பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல்  முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
  •  அவற்றை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  •  இந்தியன்  சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
  •  அக்கட்டுரைகளில்  புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும்,  தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.
  •  போப் உயர்ந்த  பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600  செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,   தமிழ் செய்யுட் கலம்பகம்  என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.
  •  பள்ளி  குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  •  பெரியவர்கள்  கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
  •  மேலை நாட்டார்  தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
  •   பழைய தமிழ் இலக்கியங்களில்  இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க  ஏற்பாடு செய்தார்.
  • 1858ஆம் ஆண்டு  உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • இங்கிலாந்திற்கு  சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு  கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
  •   திருக்குறளை 40  ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1866ஆம் ஆண்டு  வெளியிட்டார்.
  •   தமது 86ஆம்  வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
  • 13.02.1908  அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
  •  அவர், தம்  கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில்  எழுதி வைத்தார்.
  •  அவர்  தமிழ் மாணவன் என்றே தம்மை கூறிக்கொண்டார்.

இனியவை நாற்பது -8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • குழவி - குழந்தை
  • பிணி - நோய்
  • கழறும் - பேசும்
  • மயரி - மயக்கம்
  • சலவர் - வஞ்சகம்
  • மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்.
  • ஊர் - மதுரை
  • காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இனிய கருத்துக்களை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
  • ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

தமிழ்ப்பசி - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  • குவை - குவியல்
  • மாரன் - மன்மதன்
ஆசிரியர் குறிப்பு:
  • இயற்பெயர் - க.சச்சிதானந்தன்
  • ஊர் - இலங்கையில் யாழ்ப்பாண   மாவட்ட பருத்தித்துறை
  • பணி - ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி
  • புலமை - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை.
  • படைப்புகள் - ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி - 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பாணக்காவியம்
  • சிறப்பு - மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.

செய்தி உருவாகும் வரலாறு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

  • உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது.
  •  அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர் - அறிஞர் கிப்ளிங்
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம்பெறும் பக்கம் - செய்தியின் முகப்புப் பக்கம்.
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணி - கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி.
  •  செய்தியை இனங்கண்ட பின்னர் செய்தியாளர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
  •  செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதல் போன்றது.
  •  செய்தியாளர்கள் அரசின் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து செய்தியைத் திரட்டுகின்றார்கள்.
  •  செய்தியாளர்கள் அறவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய புள்ளியியல் உதவுகிறது.
  •   பொதுமக்களின் கருத்துக்களை கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்துவார்கள்.
  •  செய்திகளை உள்ளூர்ச் செய்தியாளர், வெளியூர்ச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆர்வலர்கள் அரசு அறிக்கைகள், செய்தி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
  •  உலகெங்கும் நடக்கும் செய்திகளை கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, செல்பேசி, தொலை அச்சு தொலை நகல், வானொலி. தொலைக்காட்சி, கணினி மூலம் உடனுக்குடன் பெறலாம்.
  •  இலண்டன் டைம்ஸ் இதழின் செய்தியாளர் இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறிகின்ற இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்கள்.
  •   "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ் பெற்றார்.
  •  விளையாட்டுப் போட்டிகள், புகழ்பெற்ற விசாரணைகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை காண செய்தியாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியிருப்பர்.
  •  செய்தியின் பகுதிகள் தலைப்புச் செய்தி, முகப்புச்செய்தி, உடல்பகுதிச் செய்தி (மூன்று) எனப் பதிப்புகள் பிரிக்கப்பட்டு விடியற்காலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.


இதழியல் கலைச்சொற்கள்:

 Bulletin - சிறப்புச்செய்தி இதழ்

 Deadline - குறித்த காலம்

 Editorial - தலையங்கம்

 Fake News - பொய்ச்செய்தி

 Flash News - சிறப்புச் செய்தி

 Folio No - இதழ் எண்

 Green Proff - திருத்தப்படாத அச்சுப்படி

 Layout - செய்தித்தாள் வடிவமைப்பு

உலகம் உள்ளங்கையில் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

  • கணக்கிடுவதற்காக முதலில் எளிதான "மணிச்சட்டம்" உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.
  • பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.
  • 1833 இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் "முதல் செயல் திட்ட வரைவாளர்" எனப் போற்றப்படுகிறார்.
  • ஹோவர்ட் ஜக்கன் என்பவர் ஐ பி எம் பொறியாளர் துணையுடன் ஹார்வர்ட் மார்க் 1 என்னும் எண்ணிலக்க கண்ணினியை கண்டறிந்தார் .
  • ஜப்பானும் அமெரிக்காவும் மீத்திறன் கணினியை உருவாக்க போட்டியிடுகின்றன .
  • இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல். 
  • ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிம்பெர்னர் லீ என்னும் வல்லுநர் இணையதளத்திற்கு"உலகளாவிய வலைப்பின்னல்" எனப் பெயரிட்டார். இதனை "வையக விரிவு வலை" எனவும் அழைக்கலாம்.
  • கடந்த 20 ஆண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்" என பில்கேட்ஸ் கூறுகிறார்
  • தமிழம் என்னும் என்னும் இணையதளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது 

விவேகசிந்தாமணி - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • மது - தேன்
  • தியங்கி - நாவல்
  • சம்பு - நாவல்
  • மதியம் - நிலவு
நூல் குறிப்பு:
  • விவேகசிந்தாமணி என்னும் இந்நூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.
  • இந்நூலை தொகுத்தவர் யாரென தெரியவில்லை.

பாரதத்தாய் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • வாய்மை - உண்மை
  • களையும் - நீக்கும்
  • வண்மை - வள்ளல் தன்மை
  • துலங்குதல் - விளங்குதல் 
  • சேய்மை - தொலைவு
  • தவம் - பெரும்பேறு 
பிரித்து எழுதுக:
  • தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - அசலாம்பிகை அம்மையார்
  • ஊர் - திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை
நூல்கள்:
  • ஆத்திசூடி - வெண்பா
  • திலகர் புராணம்
  • குழந்தை சுவாமிகள் பதிகம்
  • காந்தி புராணம் (20134 பாடல்கள்)
  • இராமலிங்க சுவாமிகள் பதிகம் (409 பாடல்கள்)
  • சிறப்பு: இவரை "இக்கால ஒளவையார்" என திரு.வி.க பாராட்டுகிறார்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வேலு நாச்சியார்:
  • ஆங்கிலேயரை எதிர்த்து ஆயதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
  • இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
  • சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.
  • 1772 இல் ஆங்கிலேயருக்கு முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார்.
  • பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார.
  • வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னன் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.
  • 1780 ஆண் ஆண்டு தம் கணவரை கொன்றவர்களை வென்று மீண்டும் சிவகங்கையை மீட்டார்.

கடலூர் அஞ்சலையம்மாள்:
  • 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்.
  • 1921 ஆண் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது இவரும் தம் பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
  • நீலன் சிலையை அகற்றும் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு சென்றார்.
  • வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேயே அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள்  அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
  • இவர் காந்தியடிகளால் "தென்னாட்டின் ஜான்சிராணி" என அழைக்கப்பட்டார்.


அம்புஜத்தம்மாள்:
  • பிறப்பு: 1899 ஆம் ஆண்டு
  • இவர் அனைனை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
  • இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
  • இவர் "காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்" என்று அழைக்கப்பப்படுவர்.
  • தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து "சீனிவாச காந்தி நிலையம்" *என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
  • இவர் தம் எழுபதாண்டு நினைவாக, "நான் கண்ட பாரதம்" என்ற நூலை எழுதினார்.
  • 1964 ஆம் ஆண்டு இவருக்கு "தாமரைத்திரு" (பத்மஸ்ரீ) என்ற விருது வழங்கப்பட்டது.

திருமந்திரம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • திடம் - உறுதி
  • மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
  • உபாயம் - வழிவகை
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.
  • காலம் - ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.
நூல் குறிப்பு:
  • சைவத் திருமுறைகளின் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
  • இதற்குத் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயரும் உண்டு.
  • இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.
  • திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரத்தில் எழுநூற்று இருபத்து நான்கு பாடல்களைக் கொண்டது.

நாடகக்கலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

  • நாடகம் என்னும் சொல் நாடு + அகம் = நாடகம் எனப் பிரியும்
  • நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்
  • நாட்டின் கடந்த  காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால்நாடகம்  எனப் பெயர் பெற்றது
  • கதையை,  நிகழ்ச்சியைஉணர்வை நடித்துக் காட்டுவதும்கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம்  என்பர்.
  • இதற்குக்  நாடகக்கலைஎன்னும் பெயர் உண்டு.
  • நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
    • தமிழின்  தொன்மையான கலை வடிவம் நாடகம்.
    • நாடகம் என்பது  போலச் செய்தல் என்னும் பண்பு அடிப்படையாக அமைதலைக் காணலாம்
    • பிறர்  செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
    • பண்டைய மரப்பவைக்கூத்து , பொம்மலாட்டமாக வளர்ச்சி அடைந்த பின்னர் தோல்பாவைக் கூத்து ,நிழற் பாவைக்கூத்து ஆகியன முறையே பாவைக் கூத்தின் வளர்ச்சி நிலைகளாக இருந்தன

    இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள்
    • தொல்காப்பிய  மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
    •  " கூத்தாட்  டவைக்குல்லாத் தற்றே "என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி தெரிய வருகிறது .
    • சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள்நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று நாட்டியமாடும் மாதவியை குறிப்பிடுகிறார்
    • இலக்கணம் வகுத்த நாடக நூல்கள்
      • தமிழ் நூல்களில் முறுவல்,  சயந்தம்செயிற்றியம்மதிவாணர் நாடகத்தமிழ் நூல்,விளக்கத்தார் கூத்துகுணநூல்,  கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
      • பரிதிமாற்கலைஞர்,  செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம்,  வகைகள்எழுதப்பட வேண்டிய முறைகள் நடிப்புக்குரிய இலக்கணம் நடிப்பவர்களுக்குரிய இலக்கணம்  போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
      • சுவாமி  விபுலானந்தர் எழுதிய  மதங்க சூளாமணியும்  மறைமலையடிகள் எழுதிய  சாகுந்தலமும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்
      • பம்மல்  சம்பந்தனார்நாடகத்தமிழ்  என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து  எழுதியுள்ளார்.

      காலம்தோறும் நாடகக்கலை
      • ஏழாம்  நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
      • பதினொன்றாம்  நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம்நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
      • நாயக்க  மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
      • பள்ளு நாடக வகை உழவர்களின் வாழ்க்கையை கூறுகிறது
      • பதினேழாம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.
      • பதினெட்டாம்  நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம்கோபால கிருட்டின பாரதியின்  நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
      • சமுதாய சீர்திருத்த நாடகங்களில் காசி  விஸ்வநாதரின் டம்பாச்சாரி விலாசம்  , பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை கி பி 1891 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
      • இந்நூல் லிட்டன் எழுதிய மறைவழி என்னும் ஆங்கில கதையை தழுவியது
      • கதரின் வெற்றி நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக  நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
      •  இதனைத்  தொடர்ந்து தேசியக்கொடிதேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன
      • சங்கரதாசு  சுவாமிகள்   என்று  தமிழ் நாடக உலகின் இமயமலைதமிழ் நாடக பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்
      • பிரகலாதன் ,சிறுத்தொண்டர்,  இலவகுசா ,பவளக்கொடி , அபிமன்யு ,சுந்தரி முதலிய நாற்பதுக்கும் மேற்ப்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்
      • தமிழ் நாடகத்தந்தை என்று போற்றப்பட்ட பம்மல் சம்பந்தனார் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை மொழிப் பெயர்த்துள்ளார் . 
      • இவரது மனோகரன் நாடகம் எழுபது ஆண்டுகளாக தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று விளங்கியது .
      • மதுரையில் ஒளவையார் நாடகம் அரங்கேறியது .இதில் ஒளவையாராக நடித்த தி க சண்முகனார் ஒளவை சண்முகனார் என்று அழைக்கப்பட்டார்.
      • நாடகச்  சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என்பது நாடகம் பற்றிய கவிமணியின் கருத்து 

கம்பராமாயணம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • தாது - மகரந்தம்
  • போது - மலர்
  • பொய்கை - குளம்
  • பூகம் - கமுகம்(பாக்கு மரம்)
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - கம்பர்
  • ஊர் - நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்.
  • போற்றியவர் - சடையப்ப வள்ளல்
  • இயற்றிய நூல்கள் - சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
  • காலம் - கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.
  • வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றியவர் - கம்பர். அந்நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே இது வழிநூல் எனப்படுகிறது.
  • கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
நூல் குறிப்பு:
  • ஆறு காண்டங்களைக் கொண்டது கம்பராமாயணம்.
  • பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
  • காண்டம் - பெரும் பிரிவு
  • படலம் - உட்பிரிவு
  • இப்பாடல் பால காண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது.
  • தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டுள்ளது.

தமிழர் வானியல் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வானியல் அறிவு:

  •  உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்
இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது.

மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூத்தது இயற்கை போல்

உலகம் தட்டையா? உருண்டையா?
  •  பதினைந்தாம் நூற்றாண்டில் போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று கூறினார். ஆனைல் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
  •  பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து சொன்னார்.
  •  ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம்குரலில் கூறியுள்ளார்.

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை

    ஞாயிற்றுக் காட்சி:
    •  வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு.
    •  சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றும்" என்று போற்றியுள்ளார்.
    •  ஞாயிற்றைச் சுற்றிய பாதையை "ஞாயிறு வட்டம்" என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு கூறுகிறது.

     செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் - புறம் , 30

    திங்கள் தோற்றம்:
    •  தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை "நாள்மீன்" என்றும், ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக்கூடியவற்றை "கோள்மீன்" என்றும் அழைப்பர்.
    •  திங்கள் தானே ஒளி வீசுவதில்லை, எனபதை திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.
     மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் 
    காதலை வாழி மதி.
    •  திங்களை பாம்பு கொண்டற்று என்னும் குறள் "திங்கள் மறைப்பு" (சந்திரகிரகணம்) பற்றியதாகும்.

    கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து:
    •  கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றையும் அறிந்திருந்தனர்.
    •  செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என்றனர்.
    •  வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என்றனர்.
    •  வெள்ளிக்கோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதால் இதனை "விடிவெள்ளி" என்றனர்.
    •  புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததால் அதற்கு "அறிவன்" என்றும் பெயருண்டு.
    •  வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோலாக வளம் வருவதையே வியாழன் என்றனர்.
    •  சனிக்கோளைக் "காரிக்கோள்" என்றழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

    தூமகேது:
      •  தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் கூறுவர்.
      •  தமிழ் இலக்கியங்களில் தூமகேது பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விழுதும் வேரும் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • திறல் - வலிமை
  • மறவர் - வீரர்
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - பாரதிதாசன்
  • இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
  • பெற்றோர் - கனகசபை, இலக்குமி
  • ஊர் - புதுச்சேரி
  • காலம் - 29.04.1891 - 21.04.1964
  • சிறப்புப்பெயர்கள் - பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
சிறப்பு:
  • பாரதியாருடன் கொண்ட நெருங்கிய  தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார்.
  • தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர்.
இயற்றிய நூல்கள்:
  • பாண்டியன் பரிசு
  • குடும்ப விளக்கு
  • இருண்ட வீடு
  • அழகின் சிறப்பு
  • கண்ணகி புரட்சிக் காப்பியம்
  • குருஞ்சித்திட்டு
  • தமிழியக்கம்
  • பிசிராந்தையார்

காட்டுயிரிகள் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

  • பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பிய மரபியலில் தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் 
  • ஓரறிவு - மெய்யினால் அறியும் உயிர் (புல், மரம் போன்ற தாவரங்கள்)
  • ஈரறிவு - மெய், கண் கொண்டது (நத்தை, சங்கு)
  • மூவறிவு - மெய், வாய், மூக்கு கொண்டது (எறும்பு, கரையான், அட்டை)
  • நாலறிவு - மை, கண், மூக்கு, வாய் கொண்டது (நண்டு, தும்பி, வண்டு)
  • ஐயறிவு - மெய், கண், மூக்கு, வாய், செவி (விலங்கு, பறவை).
  • ஆறறிவு - மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம் (மனிதர்).
  • அக்டோரபர் முதல் வாரத்தை அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடி வருகிறது.
  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நான்காம் நாள் "உலக வனவிலங்கு நாள்" கொண்டாடப்படுகிறது.
  • ஐம்புதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, வானம்
  • ஐம்பூதங்களில் உயிருள்ள, உயிரற்ற இருவகையான பொருள்கள் உள்ளன.
  • உலகிலேயே அதிகளவு மழை பெறும் இடம் - அசாமில் மரங்கள் அடர்ந்துள்ள "சிரபுஞ்சி"
  • உயிரிகளின் ஆற்றலுக்கு அடிப்படையாக தாவரங்கள் விளங்கிறது.
  • வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் வனவிலங்குகளை வேட்டையாடுதலை தடுக்கிறது.

வில்லிபாரதம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: 
  •  வான்பெற்ற நதி –  கங்கையாறு 
  •  துழாய் அலங்கல்  – துளசிமாலை
  •  களபம் –  சந்தனம் 
  •  புயம் – தோள்
  •  தைவந்து   தொட்டுத்தடவி 
  •  ஊன் – தசை 
  •  பகழி – அம்பு 
  •  இருநிலம் –  பெரிய உலகம் 
  •  நாமம் – பெயர் 
  ஆசிரியர் குறிப்பு:
  •  பெயர் –  வில்லிபுத்தூரார் 
  •  தந்தை –  வீரராகவர் 
  •  ஆதரித்தவர் –  வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான் 
  •  காலம் –  பதினான்காம் நூற்றாண்டு 
 நூல் குறிப்பு: 
  •  இந்நூல் பத்து  பருவங்களை கொண்டது. 
  •  நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப்  பாடலால்  ஆனது
  •  இப்பாடல் எட்டாம் பருவமாகிய கன்னபருவத்தில்  இடம் பெற்றுள்ளது 

தேவநேயப்பாவாணர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வாழ்க்கை குறிப்பு:
  • பெற்றோர் - ஞானமுத்து, பரிபூரணம்
  • ஊர் - சங்கரன்கோவில்
  • கல்வி - பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பிஓ.எல்.,
  • காலம் - 07.02.1902 - 15.01.1981
  • சிறப்பு : செந்தமிழ்ச்செல்வர், செந்தமிழ் ஞாயிறு ,தமிழ்ப் பெருங் காவலர்  என 174 சிறப்புப் பெயர்கள் 
தமிழ்பற்று:
  • தன்மை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதபச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.
தமிழை வளர்த்தவர்:
  • தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் - கால்டுவெல்
  • தனித் தமிழுக்கு வித்திட்டவர் - பரிதிமாற்கலைஞர்
  • தமிழைத் தழைக்கத் செய்த செம்மல் - மறைமலையடிகள்
  • தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் - தேவநேயப்பாவாணர்.
தமிழை மீட்டல்:
  • மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்.
  • உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேறும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவியவர்.
  • உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்" என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் அவரது ஆய்வின் இரு கண்கள்.
  • "தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைதான்" என்று கூறினார்.
அனைத்தும் தமிழில்:
  • கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றார்.
  • பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார்.
பகலுணவு, இரவுணவு:
  • ஒருமுறை தன் ஆசிரிய நண்பர்களுடன் சென்று தாரைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார்.
  • அங்கு ஒருவர் பாவனாரிடம், "ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன?" என்று கேட்டார்.
  • பாவாணர், "பாகல் உணவு, பகல் உணவாகவும்(பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுத்துண்ண நேர்ந்தது), இரா உணவாகவும் (அனைவரும் உணவின்றி இரவைக் கழித்தல்) இருந்தன"  என்றார்.
  • தமிழ் வளர்த்தல் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று எண்ணியவர் பாவாணர்.
  • பாவாணரின் படைப்புகள்:
    • தமிழ் வரலாறு
    • முதல் தாய்மொழி
    • தமிழ்நாடு விளையாட்டுகள்
    • தமிழர் திருமணம்
    • வடமொழி வரலாறு
    • தமிழர் மதம்
    • மண்ணிலே விண்
    • பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
    • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
    • சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
    • திருக்குறள் மரபுரை
    அகரமுதலி:
    • பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சில தொகுதிகளை வெளிக்கொணர்ந்தார்.
    • இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
    தன்மானம் மிக்கவர்:
    • தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்றஇயலாத சூழல் நேர்ந்தபோது, "எனக்கு வறுமையும் உண்டு; மனைவிமக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" என்று வெளியேறினார்.
    சிறப்புகள்:
    • பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
    • இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையத்திற்கு அருகிலுள்ள முறம்பில், பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
    தமிழன்னைக்கு பெருமை:
    • மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  1.  மதி – அறிவு
  2.  அமுதகிரணம் –  குளிர்ச்சியான ஒளி
  3.  உதயம் –  கதிரவன்
  4.  மதுரம் – இனிமை
  5.  நறவம் – தேன்
  6.  கழுவு துகளர் –  குற்றமற்றவர்
  7.  சலதி – கடல்
  8.  அலகு இல் - அளவில்லாத
  9.  புவனம் – உலகம்
  10.  மதலை – குழந்தை
  11.  பருதிபுரி –  கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)


ஆசிரியர் குறிப்பு:
  •  பெயர் –  குமரகுருபரர்
  •  பெற்றோர் –  சண்முகசிகாமணிக் கவிராயர்சிவகாமி சுந்தரியம்மை
  •  ஊர் –  திருவைகுண்டம்
  •  இயற்றிய  நூல்கள் – கந்தர்கலிவெண்பாமதுரை  மீனாட்சி அம்மை  பிள்ளைத்தமிழ்மதுரைக்  கலம்பகம்,  சகலகலாவல்லி    மாலை,திருவாரூர் மும்மணிக்கோவை ,   நீதிநெறி  விளக்கம்  முதலியன.
  •  சிறப்பு –  தமிழ்வடமொழிஇந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை  மிக்கவர். திருப்பணந்தாளிலும்,  காசியிலும் தம்பெயரால் மேடம்  நிறுவி உள்ளார்.
  •  இறப்பு –  காசியில் இறைவனது திருவடியடைந்தார் ..
  •  காலம் –  பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
  •   96 வகை  சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
  •  இறைவனையோ  நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக்  கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது    பிள்ளைத்தமிழ்.
  •  பத்து  பருவங்கள்பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள்  கொண்டது.
  •  இது ஆண்பாற்  பிள்ளைத்தமிழ்பெண்பாற் பிள்ளைத்தமிழ் என  இருவகைப்படும்.
  •  பத்து பருவங்களில்  காப்புசெங்கீரைதால்சப்பாணிமுத்தம்,   வருகை,  அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற்  பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை .இறுதி மூன்று பருவங்களான  சிற்றில்சிறுபறைசிறுதேர். ஆண்பாலுக்கும் அம்மானை,   கழங்கு(நீராடல்)ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாற்    பிள்ளைத்தமிழுக்கும் உரியன .
  •  புள்ளிருக்குவேளூரில்  (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள  முருகப்பெருமானின் பெயர்  முத்துக்குமாரசுவாமி.  அவர் மீது    பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர்  பெற்றது

இலக்கியத்தில் நகைச்சுவை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

நகைச்சுவை:
  • இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
  • இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
  • நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.
  • நகைச்சுவையுணர்வு இல்லாதவருக்குப் பகலும் இருளாய் தோன்றும்.
  • "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்" எனத் தொடங்கும் நகைச்சுவை உணர்வு மிக்க பாடல் நாட்டுப்புறப்பாடலில் இடம் பெற்றுள்ளது.
தொல்காப்பியம்:
  • தொல்காப்பியம், "எள்ளல், இளமை, அறியாமை, மடமை" ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது.
திருக்குறள்:
  • நகைச்சுவையின் இன்றியமையாமைப் புலப்படுத்த வந்த வள்ளுவர்,
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
என நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகத் தோன்றும் என்கிறார்.

காந்தியடிகள்:
  • காந்தியடிகள், நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கருதினார்.

இலக்கியங்களில் நகைச்சுவை:
  • கம்பராமாயணத்தில் கம்பரின் நகைச்சுவை உணர்வு அவர் தம் பாடல்களின் மூலம் அறியலாம்.
அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர மடைந்தா னன்றே
வெஞ்சின வாழி, மீலான், வாளும்போய் வீழ்ந்ததன்றே
  • வாலியை பற்றி அனுமனிடம் இராவணன் வினவும் போது, அனுமன் அதற்கு, "அஞ்ச வேண்டா! அரக்கர் தலைவா, வாலியும் இறந்தான், அவனது வாழும் இறந்துவிட்டது! ஆனால் சூரியகுலத் தோன்றலாகிய வாலியின் அழிவுக்குக் காரணமானது இராமனின் ஒரு கணையே என்பதை மட்டும் மறந்துவிடாதே!: எனக் கூறினார்.

கலிங்கத்துப்பரணி:
  • சிற்றிலக்கியங்களில் ஓன்றான் கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார் நகைச்சுவை உணர்வு தோன்ற, பல பாடல்களைப் பாடியுள்ளார்.
  • காணமுடியாத பேய்களை உருவாக்கி, உயிருள்ள உண்மைப்பிறவிகள் போல் நம் கண்முன்னே நடமாடவிட்டு நகைச்சுவைக்குரிய செயல்களை அவற்றிடையே காட்டியுள்ளார்.

காளமேகப்புலவர்:
  • இரு பொருள் தருமாறு பாடுவதில் வல்லவர்.
  • "நாங்கள் கவிராசர்கள்" என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி, கவி எனபதற்கு குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு
வாளெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு
காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே? - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காள்! நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.
எனும் பாடலைப் பாடினார்.

பாரதிதாசன்:
  • பாவேந்தர் பாரதிதாசன் மயிலின் கழுத்து நீண்டு இருப்பதாய் நகைச்சுவையுடன் பாடியுள்ளார்.
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தான்; உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே!
நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான்.
  • பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீடு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம் மயில் அப்படிப் பார்காதாம்: எனக் கூறுகிறார்.
கவிமணி:
  • நாஞ்சில் நாடு கவிஞர் கவிமணி தேசிய விநாயகம், மருமக்கள் வழி மான்மியம்" என்னும் நகைச்சுவை நூலினை அளித்துள்ளார்.
  • இந்நூல் நகைச்சுவை களஞ்சியம் எனப்படுகிறது.

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...