Click here

செய்யுள் - வாழ்த்து - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • பண் - இசை
  • வண்மை - கொடைத்தன்மை
  • போற்றி - வாழத்துகிறேன்
  • இருக்கை - ஆசனம்
ஆசிரியர் குறிப்பு:
  • திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
  • திரு.வி.க வின் பெற்றோர் - விருத்தாசலனார் - சின்னம்மையார்
  • திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  • தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)
திரு.வி.க வின் சிறப்பு:
  • இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.
  • திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?
    • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
    • பெண்ணின் பெருமை
    • தமிழ்த்தென்றல்
    • உரிமை வேட்கை,
    • முருகன் அல்லது அழகு முதலியன.
    திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?
    • 26.08.1883 - 17.09.1953
    திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?
    • பொதுமை வேட்டல்
    பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?
    • போற்றி
    பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?
    • நாடு, மதம், இனம், மொழி, நிறம்
    தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?
    • நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...