உலக மொழிகள்:
- உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.
- "எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே" என்று வள்ளலார் அருள்கிறார்.
- திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.
- கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.
- டாக்டர் கிரெளல், "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள், தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது" என்று மொழிந்து இன்புற்றார்.
- உலகில் பழமையான நிலபகுதியான "குமரிக்கண்டத்தில்" தமிழ் தோன்றியதாக "தண்டியலங்கார" மேற்கோள் செய்யுள் கூறுகிறது.
தமிழின் மேன்மை:
- தமிழ் மெல்லலோசை மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.
- பெற்றோரை குறிக்கும் "அம்மை, அப்பன்" என்னும் குமரிநாட்டுத் (நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.
- "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயக்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறினார் கால்டுவெல்.
- மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், "செந்தமிழ்" எனப்பட்டது.
- முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன.
- "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"என்பது தொல்காப்பிய நூற்பா.
- தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.
- ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.
- வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.
- தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு, பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.